ஐயப்பன் துதி

 


ஒப்பில்லா இறைவன் நீ ...!

உலகாளும் அரசன் நீ 

எண்ணிலா அடியவர் நெஞ்சில் 

ஆட் சி செய்யும் தலைவன் நீ ..!


விண்ணிலும் மண்ணிலும் 

வேதப் பொருள் யாவிலும் 

என்னிலும் உன்னிலும் 

யாவையுமாய் நிறைந்தவன் நீ...!


உனையின்றி வேற்றொன்றும் அறியேன் நான் 

உன் நினைவன்றி யாதொன்றும் உய்யேன் நான் 

உன் திருநாமம் சொல்லாமல் வாழ்வேது 

மணிகண்டா நீயின்றி நானேது?


வாழ்வது ஓர் வாழ்க்கை நீ தந்தது 

உன்னை வாழ்த்தாமல் என் வாழ்வு ஓயாது 

உன் சன்னதி வாராத வாழ்வென்று 

எந்நாளும் என் மனம் அறியாதது ...!











Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!