Posts

Showing posts from December, 2011
Image
எதார்த்தம் என்பது யாதெனில் ...! சுய கெளரவம் , நேர்மை இரண்டையும் குழி தோண்டி புதைத்து விட்டு , நம்மைச் சுற்றி நடக்கும் சுரண்டல்கள் , அத்துமீறல்கள் , பித்தலாட்டங்கள் , அசிங்கங்கள் ய ாவற்றையும் மனதார அனுமதித்து , செயற்கையாய் ஒரு வேடம்தனை மனமுவந்து அணிந்து கொள்வோமேயானால் அதுவே எதார்த்தம் அதற்கு மற்றொரு பெயரும் உண்டு - பிழைக்கத் தெரிதல் ! இதை செய்யாது போனால் , இவ்வுலகம் நம்மை கை கொட்டி சிரிக்கும் ! பொல்லாப்பு தூற்றும் ! மூடன் என்று நிந்தனை செய்யும் ! இந்த சங்கடத்திலிருந்து தள்ளியிரு க்க முயன்றால் , அதற்கும் கோழை எனும் பட்டம் தரும் ! பாரதி வேண்டியது போல , பராசக்தி தாயிடம் என் மன்றாட்டம் ஒன்றே ஒன்று தான் ! தேவியே என்னை விடு தலை செய் ! மரணம் எனும் மகத்துவத்தை எனக்கு அருள் செய் !