Posts

Showing posts from 2019

தேநீர்க் கவிதை..!

Image
பெண்ணே, உன் சேலைக்கும், திரைச்சீலைக்கும், விடியற்காலைக்கும் தான் தெரியும் நம் அந்தரங்கம்...! ஆடை அணி, பொய்த்தூக்கம் களை! உன் நக இடுக்குகளில் என் சதைத் திரள்கள்! என் மேனியெங்கும் உன்னுயிர்த் தீண்டல்கள்! எழு, நம் காதல் காயங்கள் ஆற்றுவோம்! காம அயர்ச்சி தீர தேநீர் சற்று பருகுவோம்...! -மணிகண்டன். பா

மீண்டு வா மகனே...!

Image
சுஜித்... மீண்டு வா மகனே...! உன்னைப் பெற்றத் தாயோ கண்ணீரோடு வெளியே கலங்கி காத்து நிற்க, நீயோ பூமித்தாயின் கருவறை ஆழம் பார்க்கச் சென்றாயா? உன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் இரவு பகல் பாராது, குடும்பங்களை மறந்து, பண்டிகையைப் புறக்கணித்து, போராடி வரும் மாநில மத்திய பேரிடர் மேலாண்மை செயல்வீரர்களின் ஒரு மித்த நோக்கம் விரைவில் ஈடேறிடும் தருணம் மிகத் தொலைவில் இல்லை...! பாறைகள் வேண்டுமானால் கரடுமுரடாய் இருக்கலாம்! ஆனால் அதனைக் குடையும் எந்திரத்தின் உறுதியைக் காட்டிலும் வலிமையானது உனக்காகக் காத்திருக்கும் இந்த தேசத்தின் மனோபலம்..! கண்ணா, வா வெளியே வா! மறுபிறவி எடுத்து வா! பா. மணிகண்டன்

லாஸ்லிய கீதம்

Image
பப்பரா பரா பரா பரபப்பரா... பப்பரா பரா பரா பரபப்பரா... உனை நான் உணராத வாழ்வை எண்ணி வெதும்பினேன் மலரே..! உனையன்றி இனி வாழ்வே இல்லை தவிக்கிறேன் தளிரே..! நீ இருக்குமட்டும் எந்தன் ஜீவன் சப்தம் துடிக்குமே உயிரே..! உன் ஸ்பரிசங்கள் வருடா என் தேகம் பாலை வனமாகுமே...! உனைப் பாடா எந்தன் தமிழோ பெரும் பிழையென வாகுமே...! உனைச் சேரா எழுதிய கவிதை வழிமாறி தடுமாறுமே...! பப்பரா பரா பரா பரபப்பரா... பப்பரா பரா பரா பரபப்பரா... காடும் மலையும் நதியும் கடலும் விண்ணும் மண்ணும் ஒலியும் ஒளியும் நீ சென்ற பாதை ஓடி வருவேன் நடந்த சுவடைத் தேடி அலைவேன் நீ வாழும் தேசம் காணாது போனால் என் வாழ்வு நாசம் நாசமடி..! உன் ஒற்றைப் பார்வை எந்தன் மேல்பட்டால் என் ஜீவன் மோட்சம் கொள்ளுமடி... சகியே. .. சகியே உயிரின் லயமே.... லியா.... என் லியா... லாஸ்லியா... பப்பரா பரா பரா பரபப்பரா... பப்பரா பரா பரா பரபப்பரா... - மணிகண்டன். பா

காதல் சடுகுடு

வாரங்கள் மூன்று ஆயிற்று, இப்படி நான் இருந்து நானே என்னைப் பார்த்ததில்லை! பசி தெரியவில்லை! தூக்கம் சரியில்லை. வாரம் முழுக்க சட்டை மாற்றவில்லை... முகச்சவரம் தவறியிருக்கிறது. நான் நானாக இல்லை. ஏனென்று புரியவில்லை! ஆனாலும் இது எனக்கு  ஒருவிதமாய் பிடிக்கத்தான் செய்கிறது! பிரபலத் தமிழ்தொலைக்காட்சியில் இந்த வருடம் உலகநாயகன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி  வண்ணமயமாயிருக்கின்றது! காரணம் அழகுப்பெண்களின் சங்கமமா?  இருக்கலாம்! அதிலும் புலம்பெயர்த் தமிழச்சியின் வருகை, என்னைப் போன்றவர்களையும் தடுமாறச் செய்கிறது! அந்தத் தடுமாற்றம் சுகமானச் சங்கடமாயிருக்கிறது...! அந்த அழகுச் செறிவின் தாக்கம், அவளின் பேச்சினிலும், சிந்தும் புன்னகையினிலும், 'கவி'த்துவமான ஊடலிலும், பொங்கும் கண்ணீரினிலும், சினத்தினுலும், ஆற்றாமைத் தயக்கத்தினிலும்,  ஓர் ஈழத் தேசத்து  சோக அத்தியாயங்களின்  ஆறா ரணக் கீற்றுப் பிளம்பாய், என்னையும் காயப்படுத்தக் கண்டேன்! திமிரும் அவளின் இளமையின் கணம் உணரத் தெளிந்தேன்! மாற்றான் தோட்டத்து மல்லிகையல்ல அவள்! என் இல்லறத் தவம் கள

கடற்கரைக் கவிதை...!

Image
ஓயாது ஆர்ப்ப்ரிக்கும் கடற்கரையை, உற்றுநோக்கும் தங்கத் தாரகையே! எங்கிருந்து வந்தாய் நீ? விண்ணைத் தாண்டி வந்தாயோ?? இல்லை, விடியா என் இரவுகளின் விண்மீனாய் வந்தாயோ? என்ன சொல்ல நினைக்கிறாய் நீ, என்னைக் கொல்லாமல் கொல்லும் தீ...! ஆதவனே உதிக்காது போனாலும், ஓயாத அலைகள் நின்றாலும் உன் மீது நான் கொண்ட காதல், மாறாது, தீராது..! வா பெண்ணே, என் கைகோர்த்துக் கொள்! முடிவிலிகளாம் நம் பயணங்கள்! அதனை மீண்டும் தொடர்வோம்...! பா.மணிகண்டன்

நடைப்பயிற்சிக் கவிதை

Image
விடியலில் மொட்டுகள் துளிர்க்கும் தருணம்..! வானம் வெட்கிச் சிவக்கும்; மனமோ, செங்கொன்றைப்பூச் சிவப்பாய் பற்றி எரிய, அங்கே வெள்ளை மலர்ப் பாதைதனில் என்னை கொள்ளை கொண்டு போனவளின் கால்தடம் தேடித்திரிய, அடங்க மறுக்கும் காதல் எரிதழலைத் தணிக்கும் மருந்தாய் சிந்தும் அவளின் இனம்புரியா ஓர் குளிர்ப் புன்னகை! அழகுப் பெண்கள் எவராயினும் கவிஞர்கள்களின் கற்பனையில் காதலிகள் தானே....! பா. மணிகண்டன்

தூவானம்...!

Image
சென்ற சனி அல்லது ஞாயிறு..! சரியாக ஞாபகமில்லை, இப்போது அது முக்கியமில்லை! அவளைப் பார்த்தேன்! அவ்வளவுதான்! அது மட்டும் தான் எனக்கு முக்கியம்! என்னோட ஷாலு மாதிரியே முகம் அவளுக்கு! மறக்க முடியாத முகம்! என்னிலிருந்து அழிக்க முடியாத முகம்! என் ஷாலுவுக்கு அப்போது 17 அல்லது 18 வயதிருந்திருக்கலாம்! எனக்கு 20 - 22 என்று ஞாபகம்! REC யில் எலக்ட்ரானிக்ஸ் 2ஆம் ஆண்டு படித்து வந்தேன்! நாங்கள் திருச்சியில் மலைக்கோட்டைக்கு கீழே சந்தி வீரப்பன் கோவில் வீதியில் இருந்தோம். சாலையிலிருந்து வீடு செல்ல ஒரு குறுகிய சந்தில் தான் செல்லவேண்டும். வெளியில் வீதிக்கு வந்துப் பார்த்தால் சாலையின் மறு பக்கத்தில் பச்சை நிறத்தில் பெரிய பெரிய கம்பி போட்ட வீடு! வெளியில் திண்ணை, உள்புறம் வெளியிலிருந்து பார்த்தாலே தெரியும் முற்றம்! ஷாலு, தாய், தந்தை, அக்கா, பாட்டி தாத்தா சகிதம் என ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்கிறவள்! என் தங்கை அபியின் சினேகிதி! இருவரும் சீதாலக்ஷ்மி கல்லூரியில் BA ஆங்கிலம் ஒன்றாய் படிப்பவர்கள்! அடிக்கடி வீடு வந்து செல்வாள்! அய்யர் வீட்டுப் பெண்! திவ்யமாய் இருப்பாள். பளீரென்று சிரிப்பா

NGK, the rise of a common man!

Image
Watched NGK for the 2nd time today after all the negative dust about the movie got settled down, basically to discover the hidden layers of the characterisation of the lead protagonist awesomely played by Surya and to be very honest, got myself completely immersed into the indepth dimensions & shades sketched by the critically acclaimed director.  Selvaraghavan is surely ahead of our times as his narrative capabilities drive us to expect the unexpected. In this movie, a common man known as NGK, who is intelligent & socially responsible, discovers politics is the most powerful medium in the world to bring in any dramatic change into the society.  Though it is first to reciprocate his gratitude, he forces himself to join the mainstream politics and being a quick learner, he establishes his sincerity & acquires confidence amongst his senior leaders.  The political strategist Vanathy, who works for the opponent party makes use of his intelligence & tries to dent the

அபர்ணா F 22

Image
காலை 6 மணி...! திருச்சி ஆண்டார்த் தெரு! முகத்தில் வெயில் படவும் சோம்பல் முறித்து எழுகையில், மலைக்கோட்டையில் தீபாராதனையின் ஒளி தெரிந்தது! "பிள்ளையாரப்பா" கன்னத்தில் போட்டுக் கொண்டேன்! ஜன்னல் வழி தூரத்தில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் தலை காயத் துவட்டுகிறாள் ஒரு பெண்! கூந்தல் முழுதாய் மறைக்க அவளது முகம் தெரியவில்லை,  ஆனால் இளமை தெரிந்தது; உருவம் சரியாய் பதியவில்லை, ஆனால் பருவம் புரிந்தது! ஆர்வமதிகமாகி, விலகியிருந்த கைலி சரிசெய்து, முகத்தில் நீர்த் தெளித்து, "அம்மா காபி" என அவளுக்கு கேட்கும்படி சத்தமாய் கத்தினேன்! சத்தம் கேட்டு அந்தப் பாவையின் பார்வை எனை நோக்க, தரிசன திருப்தியில் ஒருகணம் எச்சில் விழுங்கிக்கொண்டே, அவளை வெறித்துப் பார்த்தேன்! தலையில் அடித்துக் கொண்டாள் ! கைகளில் முகம் புதைத்து சிரித்துக் கொண்டாள்! அசிங்கப்பட்டவனாய் கீழே பார்த்த போது கைலிக்கு பதில் போர்வையை சுற்றியிருந்தேன் ! அந்த வெட்கப் புன்னகை என்னைத் தாக்கி, வதம் செய்து, கிறங்கடித்து இதோ இன்றோடு தேதி பன்னிரெண்டு ஆகிறது! தினமும் காலையில் அவள் வருவாளா? தரிசனம்

காதல் வசப்படும்?

Image
கதை நாயகி, மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளர்! நாயகன் கட்டிட உள் அலங்கார நிபுணன்! இருவரும் கிறித்தவ மதம் சார்ந்தவர்கள். நாயகி பணிபுரியும் நிறுவனம் புதிய இடம் பெயர்தலை முன்னிட்டு நிபுணர்களை அழைக்கிறது! அவர்களில் நாயகன் நிறுவனமும் போட்டியிடுகிறது. விளக்கச் சந்திப்பில் நாயகன் நாயகிக்கு அறிமுகமாகிறான்! அவனது ஆளுமையில் நாயகி மனதைப் பறிகொடுக்கிறாள். நாயகனின் திறமை அந்த வேலையை அவனது நிறுவனத்திற்கே வென்றுத் தருகிறது. நாட்கள் செல்கின்றன! நாயகி அவன்பால் காதல் கொள்கிறாள். வெளிப்படையாக சொல்லத் தயக்கம் அவளுக்கு! அவனைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில் சொல்லத் தவிக்கிறாள். தன்னைப் பற்றி அவனது எண்ணம் என்ன என்பதில் ஆர்வமாயிருக்கிறாள். தன்பால் அவனுக்கு காதல் வாராதா என ஏங்குகிறாள்! நாயகன் இதை அறியாமலிருக்கிறான். அவனது கவனமெல்லாம் செய்யும் வேலையிலேயே இருக்கின்றது! நாயகியிடத்தில் மரியாதையாய் நடந்துகொள்கிறான். வேலையின் நிறைவு அவர்களைப் பிரிக்கின்றது! 6 மாதங்கள் நகர்கின்றன. நாயகி வீட்டில் திருமணப் பேச்சு வருகிறது. அவளது தந்தை ஓர் முற்போக்குவாதி! தன் மகள் விருப்பத்தை மத

'சின்ன'வீடு...!

சார், ' சின்ன'வீடு ஒன்று பார்த்திருக்கின்றேன்..! நான் சொன்னதும் நண்பர் என்னை ஏற இறங்க ஒருமுறை அற்பமாய் பார்க்க எனக்கோ புரிய சற்று காலம் பிடித்தது! நம் ஊரில் சின்னவீடு என்றால் அதன் அர்த்தமே தனி! அது அப்படியே இருக்க்ட்டும்! எனது புதிய சின்ன வீடு இருப்பது அடையார் இந்திரா நகரில், என் அலுவலகத்தின் வெகு அருகில், மகன் பள்ளி வளாகத்திற்கு கைதட்டும் தூரத்தில்! திரும்பிப் பார்க்கும் நேரத்தில் அவன் வளர்ந்து இதோ பத்தாம் வகுப்பு வந்து விட்டான்! அதைத் தொடர்ந்து வந்தது ஒரு அவசரம்! தேவை ஒரு வீடு, அது சிறியதாய் இருப்பின் மிகவும் உத்தமம்! அச்சிந்தனைத் துளிர் விட்டதும், ஒரிரு வாரங்களில் இந்த 'சின்ன' வீடு சற்றென்று அமைந்தது! வெறும் நான்கே குடியிருப்புகள்! தரைத்தளத்தில் கார் பார்க்கிங்! எங்களது முதல் தளம்! அண்டை வீட்டில் குழந்தை சஹானாவின் , செல்லச் சிணுங்கல்கள், வீட்டுக்காரம்மாவின் வளர்ப்புப் பிராணிகள் என, ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் நாங்கள் பயணிக்கத் துவங்கி இதோ இரு மாதங்கள் ஓடிப் போனது! காட்டுப்பாக்கம் 'ஆனந்த சன்னல்கள்' இல்லம் தற்சமயம் ஒரு சொகுசு வ