தங்கத் தாரகை

 

தங்கத் தாரகை 

திகட்டாத பூமழை 

விண்மீன் வானிலே 

ஒளிரும் புன்னகை 


அன்பின் சிகரம் நீ 

அழகின் உச்சம் நீ 

காந்தக் கண்ணினால் 

கவரும் கவிதை நீ 


உன்னைப் பார்த்த  அந்த முதல் பொழுது 

மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் 

எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் 


நீ பேசும் ஓர் மௌன மொழி 

ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி 

நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை 

இந்த பூமி எங்கும் பூக்களடி 

நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி 

தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...










Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!