Posts

Showing posts from 2016

தோழர் முரளி ...!

Image
தோழர் முரளி ...! மிஞ்சிப் போனால் என்ன ஒரு வருடம் இருக்குமா..? எனக்கு அவரும்; அவருக்கு நானும் அறிமுகமாகி...! ஏதோ பல வருடப் பழக்கம்போல் உணர்வு மேலிடத்தான் செய்கிறது, ஒவ்வொரு முறை அவரிடத்து பேசும் போதும், பழகும் போதும்! நண்பர்கள், நல விரும்பிகள் என எல்லோரையும் போல சிநேகிதர்கள் பலர் என் வாழ்க்கையிலும் வந்து போனாலும், பெரியதாய் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு நட்பு வட்டாரம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை! அதற்கு காரணமாக இந்தத் தலைமுறை சங்கடங்களை குற்றம் சொல்வதா இல்லை சொல்லாமல் விடுவதா? புரியவில்லை ! பால்ய காலத்திலிருந்தே விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்குத் தான் நண்பர்கள்  எனக்கு! பள்ளி பிராயத்திலிருந்தே, நண்பன் ஜோ! கல்லூரி காலத்திலிருந்து, நண்பன் பிராங்க்ளின், பணியிடத்தில், நண்பர் ராஜேஷ்! இப்பொழுது வசிப்பிடத்தில் தோழர் முரளி! எங்களது முதல் சந்திப்பு, இன்னும் எனக்கு பசுமையாய் நினைவிருக்கிறது...! அது ஒரு சிறு தூறல் பெய்து கொண்டிருந்த முன்பனிக் காலம்! வசிக்கும் குடியிருப்பின் பொதுப் பணிகளில் என்னை அதிகமாய் ஈடுபடுத்திக்கொண்டிருந்த காலம்! கண்காணிப்பு குழுவுடன் தீவிர

கபாலி

Image
வெகுஜன, இணைய, பத்திரிக்கை மற்றும் வாய்ச்சொல் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு திறந்த மனதோடு கபாலி படம் பார்க்க நேற்றுச் சென்றிருந்தேன்! கனத்த மனதோடு திரும்பி வந்தேன்! இப்படி ரஜினியைப் பார்த்து தான் எவ்வளவு நாளாயிற்று! சிறையில் புத்தகம் படிப்பதில் துவங்கி இறுதியில் நிறைவாய் தன் குடும்பத்தினருடன் மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையைத் வாழத் துவங்கும் வரை எவ்வளவு இயல்பாய், நேர்மையாய், யதார்த்தமாய் அந்த கதாபாத்திரம் பயணிக்கிறது!! "தன் அன்பு மனைவியைத் தேடுதல்" எனும் ஒற்றை நோக்கத்திலிருந்து துளியும் பிறழாமல் கண்ணில் தேடலையும் நெஞ்சில் வலியையும் நடை உடை பாவனையில் மிடுக்கையும் தவற விடாது அடுத்தடுத்த காட்சிகளில் தன்னுடன் இருப்பவர்கள் முதல் தன்னை திரையில் பார்க்க வந்திருக்கும் ரசிகர்கள் வரை அனைவரையும் தன்னோடு அரவணைத்துச் செல்ல வைத்திருக்கும் படியான ஒரு ஈர்ப்பினை படத்தின் ஜீவநாடியாய் உலவ விட்டிருப்பத்தில் இயக்குனர் பா ரஞ்சித் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை! இது ரஜினி படமா இல்லை ரஞ்சித்தின் படம

ஏலே மக்கா...!

Image
"ஆச்சிக்கு வயது 97 நடக்கிறது! இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு முன்பு போல முடிவதில்லை! கண்கள் ஒத்துத்துழைத்தாலும் காதுகள்...? அடிக்கடி "சிவ சிவா"வைத் தவிர வாயும் அதிகம் வார்த்தைகளை உதிர்ப்பதில்லை! அவர்களால் முடிந்தால் அழைத்து செல்லுங்கள்!" மாமா சென்ற திங்கள் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலிக்கத் தான் செய்கிறது! இருந்தாலும் பிடிவாதமாய் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தேன்! அப்போது தெரியாது இதுவே ஆச்சியின் இறுதி வருகை என்று..! என் வீட்டில் அவர்கள் கடைசியாக இருந்து சென்ற அந்த இரெண்டு நாட்களில் அவர்கள் நின்றதும், நடந்ததும், பேசிய ஓரிரு சொற்களும் பசுமையாய் ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது! தலையில் பொடுகோ அல்லது பேனோ அவர்களை அதிகம் படுத்தி இருக்க வேண்டும், "கோலம் இங்கே கொஞ்சம் தலையைப் பாரு" அரை ஜீவனாய் தன் மகள் பெயர் சொல்லி அவர்கள் ஒலிக்க, நெற்றிச் சுருக்கங்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டிருக்கும் விபூதி, விடாமல் தலையை சொறிவதால் சற்றே கொஞ்சம் மங்கித் தெரிந்தது! ஆச்சி ஒரு வைராக்கிய பெண்மணி! தெற்கில் குமரி மாவட்டத்தில் பிறந்ததனாலோ என்னவோ குமர

காதலர் தினம்!

Image
அன்று காதலர் தினம்! இன்னும் பசுமையாக இருக்கிறது! என் "அவளை" நான் இரெண்டாம் முறையாகப் பார்த்த நாள், 2003, பிப்ரவரி 14 ஆம் நாள் காலை, பெங்களூர் புகைவண்டி நிலையத்தில்...! ஒரு முயல் குட்டியாக வெளியே மெல்லத் தெரிந்தாள்! கண்களில் அவ்வளவு காதலையும் பயத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு, என் தங்கையின் முதுகின் பின்னால் தன்னை சின்னதாய் மறைத்துக் கொள்ள முயற்ச்சித்துத் தோற்றுப் போய்க் கொண்டிருந்தாள்! எனக்கு அவளைப் "பார்த்ததும் பிடித்துப் போனது" நடந்து சரியாக ஒரு ஆறு மாதங்கள் ஆகி விட்டிருந்தது! அதற்குப் பிறகு இப்பொழுதுதான் மீண்டும் பார்க்கிறோம்! இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் அலைபேசிகளிலும் தொலைபேசிகளிலும் தான் எங்களைப் கேட்டுக் கொண்டிருந்தோம்! காதல் செய்வது எவ்வளவு வலிக்கச் செய்யும் என்பதை அறிந்தே புரிந்து கொண்டிருந்தோம்! காதல் பைத்தியம் பிடிக்கச் செய்யும் என்பதைத் தெரிந்தே ஒருவர்பால் ஒருவர் பித்து கொண்டிருந்தோம்! காதல், பசியை மறந்துப் போகச் செய்யும் என்பதனை உணர்ந்தே ருசியையும் மறுக்கக் கற்றுக் கொண்டிருந்தோம்! தங்கையின் திருமணம் நடைபெறாது என் திரும

என்ன தவம் செய்தேன் நான்!

Image
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது ! அதனினும் அரிது   என் பெற்றோர்களுக்கு   மகனாய் பிறக்கும் வரத்தைப்   பெற்றல் அரிது ! எதிலிருந்து துவங்குவது என்றுத் தெரியவில்லை ! முக்கியமான எதையும் விட்டுவிடக் கூடும்   பாவம் செய்யும் துணிச்சலும் எனக்கு இல்லை ! பதிவுகள் பலவும் பலகாலம் நான் எழுதி வந்தாலும்   இப்பதிவு எழுதும் அவசியம்   இப்பொழுது வந்தாகி விட்டதா எனவும் விளங்கவில்லை ! இருப்பினும் இனியும் எழுதாது தாமத்திதால்   என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் என்று எனக்குத் தோணவில்லை ! ஆதலால் துளியும் தள்ளிபோடாது எழுதக் கடவுவது   என எனக்கே ஒரு கட்டுப்பாடை வரைந்துக் கொண்டுத் துவங்குகிறேன் ! வருடம் 1970! அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியொன்பது ! அந்த யுவதிக்கோ இருபத்தியொன்று இருந்திருக்கலாம் ! சொந்தமே ஆனாலும் காதல் செய்வது எனக் கருதி   முறைப் பெண்ணிற்கு " கள்ளோ காவியமோ " பரிசளிக்கின்றான் ! காதலியின் கன்னத்தில்   வெட்கச் சிவப்பு மறையும் முன்   திருமணம் குறித்து இரு மனங்களும்