Posts

Showing posts from October, 2023

அந்தி மழை பொழிகிறது ...!

அந்தி மழை பொழிகிறது ...! மண் வாசமும் உன் வாசமும் கலவையாய் காதலாய்... உன் அருகாமை நெருக்கத்தில்  புறப்பட்ட தனலோ என்னில் புயலாய் வீச   பொங்கிய வியர்வைத் துளிகளை ஒற்றிக் கொள்ள  உன் முந்தானையை அன்றோ தேடுகிறது மனம்..!!! "பாப்பா அழுகின்றாள்"  என விருட்டென எழுந்து சென்றாய் ... நீயெழுந்த வேகத்தில், சேலையின் முந்தியில்  என்னில் எழுந்த விரகத் தீயினை  முழுதாய் அணைத்திட அன்றோ துணிந்தாய்...! இல்லறம் பேணும் நல்லறம்  தாம்பத்திய சமரசங்களால் ஆனதேயாயினும்  அதிலும் ஓர் சுகமன்றோ இருக்கிறது ...! பாவமாய் உனை நான் காதல் யாசிக்க , "குழந்தையை விடவா ?"  என நீ  செல்லமாய் அதட்டினாலும்  வெட்கச் செறிவினை கவிதையாய்  கண்கள் பேசிட , என் வேட்கையின் தாகம் தீர  அழுத்தியணைத்து இதழ் பதித்து முத்தமிட்டால்  ஜீவ சாபல்யமன்றோ அடைவேன் ...! மகளை தூங்கச் செய்தாயெனின் விரைந்து வா , காதலாய் காத்திருக்கிறேன், நிலவு பொழிகிறதடி பெண்ணே ...! 

ஐயப்பன் துதி

  ஒப்பில்லா இறைவன் நீ ...! உலகாளும் அரசன் நீ  எண்ணிலா அடியவர் நெஞ்சில்  ஆட் சி செய்யும் தலைவன் நீ ..! விண்ணிலும் மண்ணிலும்  வேதப் பொருள் யாவிலும்  என்னிலும் உன்னிலும்  யாவையுமாய் நிறைந்தவன் நீ...! உனையின்றி வேற்றொன்றும் அறியேன் நான்  உன் நினைவன்றி யாதொன்றும் உய்யேன் நான்  உன் திருநாமம் சொல்லாமல் வாழ்வேது  மணிகண்டா நீயின்றி நானேது? வாழ்வது ஓர் வாழ்க்கை நீ தந்தது  உன்னை வாழ்த்தாமல் என் வாழ்வு ஓயாது  உன் சன்னதி வாராத வாழ்வென்று  எந்நாளும் என் மனம் அறியாதது ...!

தங்கத் தாரகை

  தங்கத் தாரகை  திகட்டாத பூமழை  விண்மீன் வானிலே  ஒளிரும் புன்னகை  அன்பின் சிகரம் நீ  அழகின் உச்சம் நீ  காந்தக் கண்ணினால்  கவரும் கவிதை நீ  உன்னைப் பார்த்த  அந்த முதல் பொழுது  மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன்  எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன்  நீ பேசும் ஓர் மௌன மொழி  ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி  நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை  இந்த பூமி எங்கும் பூக்களடி  நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி  தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...

காதல் மழை

Image
மழை பொழியும் நேரம்  மனம் குளிரும் காலம்  இதழ் விரியா தூரம்  இனம் புரியா மோகம்  சாரல் மழை எந்தன் மேலே விழ தூறல் எங்கும் உந்தன் மேலே பட  என்னில் காதல் மழையாய் கொட்டுதடி  உன்னைக் காணா ஏக்கம் கொல்லுதடி  ஆகாய வீதிதனில்  மேகத்துக் கூட்டத்தில்  பூபாள பாடல் ஒன்று ஒலிக்கின்றது  அதுவே மழையாக மாறித் தான் பொழிகின்றது  தீராத விரதத்தில்  மாறாத தாபத்தில்  என்னுள்ளே காதல் ஒன்று இருக்கின்றது  அது உன்னைத் தான் வந்தடையத்  துடிக்கின்றது  போதும் போதும்  உன்கொல்லும் மவுனம்  காலம் மாறும்  இனி மண்ணில் தூவானம்  மழை முடியும் தருணம்  என் மனதுக்குள் நீ வரணும்  கார் காலம் முழுதும்  நம் காதல் கதை தொடரட்டும் ...!  

காதல் (க)விதை ...!

Image
  கண்ணுக்குள் காதல் விதைத்தாய் ..! கண்ணே என் கண்ணில் கலந்தாய் ... இன்னும் என்ன வெல்லாம் புரிவாய் ... என்னை ஏதோ ஏதோ செய்தாய் ..! பூந்தளிரே ... புதுப் புயலே ... காதல் செய்யடி ..!! என்னைக் காதல் கொள்ளடி ...! யார் யாரோ வருவார் , யார் யாரோ செல்வார்  நீ மட்டும் என்னை விலகாதே  என் காதல் உன்னை வருத்தாதே  இந்த மண்ணில் வாழும் மட்டும்  நாம் இருவரும் இணைந்திருப்போம்  பூந்தளிரே ... புதுப் புயலே ... காதல் செய்யடி ..!! என்னைக் காதல் கொள்ளடி ...!

நினைவிருக்கா...??

Image
  அன்று நல்ல மழை பெய்து விட்டிருந்தது...!ஜன்னல் கம்பிகளில் இன்னும் நீர்த் திவிலைகள் சொட்டிக் கொண்டிருந்தன...!புறாக்கள் தண்ணீர் தடாகங்களில் குளியலிட்டுக் கொண்டிருந்தன...! மாலை தேநீரைப் பருகியபடியே வழியில் செல்வோரை எல்லாம் நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க... தெரு முனையில் தேங்கியிருந்த நீரில் வெளிர் நீலக் கலரில் உன் சேலையின் நிழல் தெரிய உன்னைப் பார்க்கும் அவசரத்தில் விரலைச் சுட்டுக்கொண்டேன்..! நல்ல உயரம் நீ... ஒல்லியுமில்லை, பூசினமாதிரியும் இல்லாததாய் ஒரு தேகம்... உன் வயதை பருவம் சொல்லாமல் சொல்ல, கழுத்தில் நீளமாய் ஒரு தங்கச் சங்கிலி, மேட்டுப் பிரதேசத்தின் மத்தியில் கர்வமாய் ஆடிக் கொண்டிருக்க, கண்களைத் தாண்டி மையின் கருமையும், இதழ்கள் முழுதும் மெலிர் வண்ணப் பூச்சு உறுத்தாமலும் படிந்திருக்க, நெற்றியில் கோவிப் பொட்டிருந்தது...! தூவானமே ஆனாலும் அந்த மங்கியப் பொழுதில் நீ மட்டும் என் ரசனைகேற்றவளாய் அழகாய்த் தெரிந்தாய்...! மழை நீரைச் சேலை நனைக்காதிருக்க சற்றே கெண்டைக் கால்களின் மேலே ஒரு கையில் தூக்கியபடி  நீ கடக்க முயல எதிர்பாராமல் வந்த மகிழுந்து உன் மேல் மழை நீரை வாரியடித்து விருட்டென செ