Posts

Showing posts from September, 2009

பசுமையான அந்த பத்து வருடங்கள்!

Image
பசுமையான அந்த பத்து வருடங்கள்! 1985 ஆம் ஆண்டு, முதன் முதலில் காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு எங்கள் ஜாகை மாற்றப்பெற்றது! அப்பா, முனிசிபல் பொறியாளராய் இருந்தவர், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாற்றம் பெற்றார்! அப்பாவுக்கு ஒரு பழக்கம். எங்கெல்லாம் அவருக்கு மாற்றல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எங்களையும் உடன் கூட்டிக்கொண்டு சென்று விடுவார்! திருச்சி வரும் முன்னர், நான் காரைக்குடி, மார்த்தாண்டம், சென்னை அம்பத்தூர், தேவகோட்டை என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன்! அப்பாவுக்கு நன்றி! நான் ஒரு கலா ரசிகனாய் இருப்பதற்கு ஒருவேளை இது கூட அச்சாரமாய் இருந்திருக்கலாம்! திருச்சியில், முதலில் நாங்கள் செக்கடித் தெருவில், பாப்பாக்கா வீட்டு மாடியில், நான்கு புறமும் சுவர், தலைக்கு மேல் மூங்கில் கீற்று கொட்டகை, தகர டின் தடுப்பு குளியல் மற்றும் கழிவறை, மழை வந்தால் ஆங்காங்கே சொட்டும் தண்ணீரை நிரப்ப அலுமினிய பாத்திரங்கள், வெயில் அடித்தால் தரை எங்கும் ஜொலிக்கும் சூரிய வெளிச்ச வைரங்கள் என ஒரு அட்டகாசமான சூழலில் தான் வாழத் துவங்கினோம்! அந்த வீட்டுக்கு வராத நண்பர்களும், உறவினர்களும் இல்லை; அந்த வீட்ட

ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?

Image
ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன? இடுகை எழுதும் எல்லோருக்கும் வணக்கம்! இவ்விடுகையின் நோக்கம் பெரிதாய் ஒன்றும் இல்லை! ஆனால் ஏதும் இல்லாமலும் இல்லை! இடுகை எழுதும் அவசியம் என்ன? என என்னையே நான் கேட்டுக்கொள்ளும் அவசியம் வந்தபடியால் இவ்விடுகை எழுதியாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்! காரணம் சொல்லும் அளவுக்கு காரணங்கள் இல்லாது போனாலும், ஏதாவது ஒரு காரணம் கிடைக்காது போய்விடாதா என்ன? தினமும் ஒன்று என்றது போயி, வாரம் கட்டாயம் ஒன்று என்று முடிவெடுத்து, கடைசியில் கண்டிப்பாக மாதத்திற்கு இருமுறை என்றாகி, இப்பொழுது, நண்பன் ஜோ, "மவனே, எழுதுறியா இல்லையா?" என்று கொலை மிரட்டல் விடுத்ததும், எழுதியே தீர்வது என்று முடிவு எடுத்ததும், மண்டையில் ஒரு மண்ணும் உதிக்காததால் ஏற்பட்ட விபத்து, இவ்விடுகை! ஏதாவது எழுதியே ஆகவேண்டுமா என்ன?

ஆந்திர முதல்வர் YSR ரெட்டி எங்கே?

Image
ஆந்திர முதல்வர் YSR ரெட்டி எங்கே? நேற்று காலை ஒன்பது மணியிலிருந்து மாயமான YSR ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் இந்தியா ராணுவமும் ஆந்திர அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கும் இந்த பொழுதில், அவருக்காகவும், அவருடன் பயணித்த 2 விமானிகள், 2 அதிகாரிகள் ஆகியோரது நலத்துக்காகவும், நாம் அனைவரும் ஒருமித்த இந்திய உணர்வோடு, பிரார்த்திப்போம்!