Posts

Showing posts from August, 2020

அன்பே சிவம்

Image
  அ ங்கு சுற்றி இங்கு சுற்றி க டைசியாக  அவரவர் வீட்டு வாசலுக்கே வந்து கரோனா கதவைத் தட்டத் துவங்கியாகி விட்டது.  எவ்வளவு தான் விழிப்புடனிருந்தாலும் இல்லாவிட்டாலும் தப்பித் தவறி அதனிடம் சிக்கி விட்டால், மீண்டு வருவோமா இல்லை மாண்டு வீழ்வோமா என்பது இன்னும் புரியாத புதிராகத்தானிருக்கிறது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபுறம், பிரார்த்தனைகள் மற்றொரு புறம் என என்னெவெல்லாம் மனிதன் மேற்கொண்டாலும், எல்லாம் விதிப்படியே நடக்கும் என்பதையெல்லாம் பொய்யாக்கி விட்டு, காலனின் கணக்குகளை திருத்தியமைத்து, கரோனா தன் பங்கிற்கான  சொந்த எண்ணிக்கையை மென்மேலும் கூட்டிக் கொண்டுதான் போகிறது.  யார் மிஞ்சுவார் யார் கெஞ்சுவார் என எல்லோர்க்கும் உண்மையான மரண பீதியை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.   வீட்டிலிருந்து கொண்டே வேலை பார்க்கும் கொடுப்பினை எத்தனை வேலைகளுக்கு இருக்கின்றது?  வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் தான் நாலு காசு சம்பாரிக்க முடியும் எனும் எண்ணற்ற மானிடர், உயிர் முக்கியமா இல்லை பசி முக்கியமா எனும் கேள்விக்கெல்லாம் விடை தெரியாமல் இருக்கும் வரை நடத்தும் உண்மையான வாழ்வா சாவா போராட்டத்தைக் கண்டு கொக்கரிக்கும