Posts

Showing posts from May, 2019

அபர்ணா F 22

Image
காலை 6 மணி...! திருச்சி ஆண்டார்த் தெரு! முகத்தில் வெயில் படவும் சோம்பல் முறித்து எழுகையில், மலைக்கோட்டையில் தீபாராதனையின் ஒளி தெரிந்தது! "பிள்ளையாரப்பா" கன்னத்தில் போட்டுக் கொண்டேன்! ஜன்னல் வழி தூரத்தில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் தலை காயத் துவட்டுகிறாள் ஒரு பெண்! கூந்தல் முழுதாய் மறைக்க அவளது முகம் தெரியவில்லை,  ஆனால் இளமை தெரிந்தது; உருவம் சரியாய் பதியவில்லை, ஆனால் பருவம் புரிந்தது! ஆர்வமதிகமாகி, விலகியிருந்த கைலி சரிசெய்து, முகத்தில் நீர்த் தெளித்து, "அம்மா காபி" என அவளுக்கு கேட்கும்படி சத்தமாய் கத்தினேன்! சத்தம் கேட்டு அந்தப் பாவையின் பார்வை எனை நோக்க, தரிசன திருப்தியில் ஒருகணம் எச்சில் விழுங்கிக்கொண்டே, அவளை வெறித்துப் பார்த்தேன்! தலையில் அடித்துக் கொண்டாள் ! கைகளில் முகம் புதைத்து சிரித்துக் கொண்டாள்! அசிங்கப்பட்டவனாய் கீழே பார்த்த போது கைலிக்கு பதில் போர்வையை சுற்றியிருந்தேன் ! அந்த வெட்கப் புன்னகை என்னைத் தாக்கி, வதம் செய்து, கிறங்கடித்து இதோ இன்றோடு தேதி பன்னிரெண்டு ஆகிறது! தினமும் காலையில் அவள் வருவாளா? தரிசனம்

காதல் வசப்படும்?

Image
கதை நாயகி, மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளர்! நாயகன் கட்டிட உள் அலங்கார நிபுணன்! இருவரும் கிறித்தவ மதம் சார்ந்தவர்கள். நாயகி பணிபுரியும் நிறுவனம் புதிய இடம் பெயர்தலை முன்னிட்டு நிபுணர்களை அழைக்கிறது! அவர்களில் நாயகன் நிறுவனமும் போட்டியிடுகிறது. விளக்கச் சந்திப்பில் நாயகன் நாயகிக்கு அறிமுகமாகிறான்! அவனது ஆளுமையில் நாயகி மனதைப் பறிகொடுக்கிறாள். நாயகனின் திறமை அந்த வேலையை அவனது நிறுவனத்திற்கே வென்றுத் தருகிறது. நாட்கள் செல்கின்றன! நாயகி அவன்பால் காதல் கொள்கிறாள். வெளிப்படையாக சொல்லத் தயக்கம் அவளுக்கு! அவனைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில் சொல்லத் தவிக்கிறாள். தன்னைப் பற்றி அவனது எண்ணம் என்ன என்பதில் ஆர்வமாயிருக்கிறாள். தன்பால் அவனுக்கு காதல் வாராதா என ஏங்குகிறாள்! நாயகன் இதை அறியாமலிருக்கிறான். அவனது கவனமெல்லாம் செய்யும் வேலையிலேயே இருக்கின்றது! நாயகியிடத்தில் மரியாதையாய் நடந்துகொள்கிறான். வேலையின் நிறைவு அவர்களைப் பிரிக்கின்றது! 6 மாதங்கள் நகர்கின்றன. நாயகி வீட்டில் திருமணப் பேச்சு வருகிறது. அவளது தந்தை ஓர் முற்போக்குவாதி! தன் மகள் விருப்பத்தை மத