Posts

Showing posts from 2020

அஞ்சலி, அஞ்சலி, புஷ்பாஞ்சலி...!

Image
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்  இனி எப்போது?  மன்றம் வருமோ தென்றல்? அந்தி மழை பொழியாதோ? வானுயர்ந்த சோலையில் நீ நடந்த பாதை எங்கே? இளைய நிலா இனி பொழியாதோ? தங்கத் தாமரை மலராதோ? சங்கீத ஜாதிமுல்லையை ஏன் காணவில்லை? ரோஜாவை தாலாட்டுமா தென்றல்? மௌனமானதே நேரம்..! கடவுள் அமைத்து வைத்த மேடையில் யாருக்கு இனி  அஞ்சலி, புஷ்பாஞ்சலி? போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமேயென ஜீவ சுகம்பெற  ராக நதியினில் நீந்தச் சென்றனையோ? எஸ் பி பி அய்யா...! நீரின்றி இனி அமையுமோ இசை உலகு? இப் பிரபஞ்சம் முழுமையும் உன் குரல் ஒலித்தாலும் இனி உம்மை நேரில் பார்ப்பது போல் வருமோ? குழந்தை போல் சிரிக்கும் உன் முகம்தனை இனி காண்பது எப்போது? காலனின் பசிக்கு உன் இசையை காணிக்கை ஆக்கச் சென்றாயா? நீங்குமோ எங்கள் துயரம்? தாங்குமோ இந்த பூலோகம்? பா. மணிகண்டன்

அன்பே சிவம்

Image
  அ ங்கு சுற்றி இங்கு சுற்றி க டைசியாக  அவரவர் வீட்டு வாசலுக்கே வந்து கரோனா கதவைத் தட்டத் துவங்கியாகி விட்டது.  எவ்வளவு தான் விழிப்புடனிருந்தாலும் இல்லாவிட்டாலும் தப்பித் தவறி அதனிடம் சிக்கி விட்டால், மீண்டு வருவோமா இல்லை மாண்டு வீழ்வோமா என்பது இன்னும் புரியாத புதிராகத்தானிருக்கிறது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபுறம், பிரார்த்தனைகள் மற்றொரு புறம் என என்னெவெல்லாம் மனிதன் மேற்கொண்டாலும், எல்லாம் விதிப்படியே நடக்கும் என்பதையெல்லாம் பொய்யாக்கி விட்டு, காலனின் கணக்குகளை திருத்தியமைத்து, கரோனா தன் பங்கிற்கான  சொந்த எண்ணிக்கையை மென்மேலும் கூட்டிக் கொண்டுதான் போகிறது.  யார் மிஞ்சுவார் யார் கெஞ்சுவார் என எல்லோர்க்கும் உண்மையான மரண பீதியை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.   வீட்டிலிருந்து கொண்டே வேலை பார்க்கும் கொடுப்பினை எத்தனை வேலைகளுக்கு இருக்கின்றது?  வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் தான் நாலு காசு சம்பாரிக்க முடியும் எனும் எண்ணற்ற மானிடர், உயிர் முக்கியமா இல்லை பசி முக்கியமா எனும் கேள்விக்கெல்லாம் விடை தெரியாமல் இருக்கும் வரை நடத்தும் உண்மையான வாழ்வா சாவா போராட்டத்தைக் கண்டு கொக்கரிக்கும

மதம் பெயரில் அரசியல் எதற்கு?

Image
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்க் கடவுள் முருகனைத் துதித்து, தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்தில் வரும் சில வரிகளை விமர்சித்து பேசிய காணொளியைக் காரணம் காட்டி, எழுந்துள்ள எதிர்ப்பலையினால், அதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டி, அந்த காணொளியைய் பார்த்தேன்.  அந்த நபர் குறிப்பிட்ட படி, கவசத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளும், அதற்கான பொருளும் சரியே.  ஆனால், அதை எடுத்துக்காட்டிய விதம், சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.  அதன் வெளிப்பாடே, தற்போது ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலை.  நானும் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் தான்.  ஆனால் எனக்கு அந்த நபர் மீது எந்த வருத்தமும் இல்லை.  ஏனெனில், அது அவரது கருத்து சுதந்திரம்.  அதற்கு எதிர்வினையாற்றியாகிய வேண்டிய கட்டாயம் எவர்க்கும் தேவையுமில்லை.  சில விஷயங்களை பெரிதுபடுத்துவதாலேயே அவற்றுக்கு அவசியமற்ற முக்கியத்துவம் கிடைத்து விடுகிறது.  என்னுடைய பார்வையில், அந்த நபருக்காகவும், அவரது வெறுப்பாளர்களுக்காகவும், நான் சொல்ல விரும்புவது இதைத் தான். கடவுளிடம் ஒரு பக்தன் தனக்காகவும் மற்றும் தன் குடும்பத்தில் உள்ள

தாங்கிக் கொள்(ல்)வாயடி...!

Image
தோழியே, என் காதலியே..! என் மனச்சுமையை இறக்க உன் மார்சுமையில் முகம் பதித்தேன், மூர்ச்சையானேன்! விம்மும் உன் தேகத் தலையணைகளில் என்னை அணைத்துப் புதைத்துக் கொண்டு மோட்சம் அன்றோ தந்தாய்...! என் நெஞ்சக் குமுறல்களின் வலி தாளாது நான் துவள உன் பருவ மேடுகளில்  வழிந்தோடிய என் கண்ணீர் பொங்கும் உன் காம தகதகப்பில் சுவடின்றி ஆவியாய்ப் போனதடி! ஆடையாய் எனைப்  போர்த்திக் கொண்டு, மோகத் தடம்பதிக்க உன் இடையின் இடைவெளியில் நிரந்தரப் பள்ளத்தாக்கில்  என் உயிரின் உதிரத்தை வாஞ்சையாய் நிரப்பிக் கொண்டாய்...! எண்ணிலாத் துயர் வரினும் என்னிலே துயர் வரினும் உன் மேனிதன்னில் கண் மூடிக் கிடந்தால் போதுமடி! என் சாபமும் விரக தாபமும் ஒன்றாய்ச் சேர்ந்துத் தீருமடி...! சகியே..! என்னைச் சகித்துக் கொண்டவளே..! வா, எனை ஆசுவாசப்படுத்து! அசுத்தமாயிருக்கும் என் மனப் பிரதேசத்தை உன் இதழின் ஈரத்தால் துடைத்துச் சுத்தப்படுத்து..! நாளையின் புதிய விடியலாவது நமக்கு நம்பிக்கை பாய்ச்சட்டும்..! மணிகண்டன். பா

Glimpses from an unposted lockdown diary...!

Image
It all started way back last November 2019 itself.  Many small-time entrepreneurs had started getting the feelers of nationwide economic slowdown and as an effect of which, they hardly received enquiries / orders.  The customers who had promised to award the contracts / businesses, conveniently shelved them off for the next financial year citing the slowdown.  Post November till mid of March 2020, these entrepreneurs managed to do very few works & before the receipt of their final payments, there arrived the Covid 19, in the 2nd week of March.  Within the next 3-4 days, central govt announced its first lockdown citing the severity of the pandemic.  As soon as the lockdown was announced, those who postponed the projects / orders for this financial year, cautiously dropped the idea of doing them once for all.  So, projects got deferred.  Payments got stuck.  March passed, April & May got over and June is also getting over in no time.  Again, it has been extended till the

கண்ணுக்குத் தெரியாத அரக்கன் ...!

Image
வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது என்பதனை புரிந்து கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.  மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இங்கே கற்பிக்கப்படுவது என்ன?  எதைச் செய்தால் சாதனை என்று பார்க்கப்படுகிறது? நன்றாக படிக்க வேண்டும்; நல்ல கல்லூரியில் இடம் வேண்டும்; நல்ல வேலையில் சேர வேண்டும்; நல்ல சம்பாத்தியம் செய்ய வேண்டும்;  மகிழுந்து ஓட்ட வேண்டும்; வீடு வாங்க வேண்டும்; நல்ல  வாழ்க்கைத் துணையினை அடைய வேண்டும்; நல்ல குழந்தைகளை பெற வேண்டும்; பிறகு பெற்றக் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும், அது வரை ஓடிக் கொண்டிருக்க வேண்டும்; தத்தமது குடும்பத்திற்காக பொருள் ஈட்டுவதிலேயே காலம் கடத்த வேண்டும்; பின்பு நாம் சரியாகத் தான் வாழ்ந்து வந்துள்ளோமா என்று ஆராயக் கூட அவகாசமில்லாமல் ஒரு நாள் மரித்தும் போய்விட வேண்டும்.   இதற்குள் எத்தனை எத்தனையோ நல்ல அல்லது தீய குணநலன்களை வளர்த்துக் கொண்டும் அல்லது அனுபவித்துக் கொண்டும் காலம் தள்ளுகின்றோம்.  எது சரி அல்லது எது தவறு என்ற எந்தப் புரிதலும் இல்லாமலே வாழ்ந்து, நமக்கு எல்லாம் தெரியு

கரீ(ரோ)னா வைரஸ்...!

Image
எதேச்சையாகத் தான் நடந்தது அது! "பீனிக்ஸ் மால்" பார்க்கிங்  வளாகத்தில் காரைப் பார்க் செய்து விட்டு கதவைத் திறக்கும் போது, அருகில் பூனையாய் ஒரு கருப்பு ஆடி மெல்ல ஊர்ந்து வந்து சேர்ந்தது.  அதிலிருந்து அந்தப் பெண் இறங்கி தன் தீர்க்காமான நெற்றியில் படர்ந்த கேசத்தை சரி செய்ய முயல, அவள் கைகளில் இருந்து வாலட் கீழே விழுந்து, காரின் அடிப்பகுதியில் சென்று விட, அதை எடுக்க முயன்றுத் தோற்று, மேலே எழும்பியவள், நான் பார்ப்பதைப் பார்த்ததும், "இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்றதும், காத்திருந்தவனாய் "ஸ்யூர்" என்று, குனிந்து எடுக்க முயல, அருகில் நின்று கொண்டிருந்தவளின் முடிவிலியான முழங்காலை முழுமையாகப் பார்க்க நேரிட, புழுக்கத்தில் வியர்வை சட்டையை நனைத்து விட்டிருந்தது.  வாலட்டை எடுக்கும்போது அதிலிருந்து அவளது விசிட்டிங் கார்டு ஒன்று வெளியேற, அதனை லாவகமாய் மறைத்து, வாலட்டை மட்டும் எடுத்துக் கொடுத்ததும், " வெரி கைண்ட் ஆஃப் யூ" எனச் சர்க்கரையாய் ஒரு புன்முறுவல் செய்து, கை கொடுத்து விட்டு, "யூ ஆர் ஸ்வெட்டிங்" அன்று குறும்பாய்ச் சொல்லிச் சென்றாள்.  அவள்