Posts

Showing posts from May, 2017

ஆஞா...!

Image
கணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர்! நாங்கள் செல்லமாக "ஆஞா" என்றே அழைப்போம்! 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு இருக்கும்வரை ஆஞா எங்களுடன் எங்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது! அவர் எங்களுடன் இருந்த அந்த பத்து வருடங்கள் எங்களால் அவ்வளவு சுலபமாய் மறக்க இயலாது! நெடு நெடுவென உயரம்! இருட்டுக் கறுப்பு நிறம் ! வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா ! எந்த நேரமும் கைவிரலில் சிகரெட் ! அதன் சாம்பலை தட்டுவதற்கு அலுமினிய ஆஷ் டிரே! லொக்கு லொக்கு என இருமல் ! பச்சை பச்சையாய் சளி  என்று ஒரு அபூர்வ கலவைதான் ஆஞா ! 24 மணி நேரமும் "பிள்ளையாரப்பா, ஸ்ரீ ராமஜெயம் " என இறைவன் நாமத்தையோ அல்லது "தனலக்ஷ்மி தனலக்ஷ்மி " என இறந்துபோன மனைவியின் பெயரையோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்! அம்மாவிற்கு ஏதோ தன்னால் ஆன உதவிகளை செய்து கொண்டிருப்பார்! எங்கள் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுப்பார் ; காய்ந்த துணிமணிகளை அழகாய் மடித்து வைப்பார்! தினமும் மாலை மலைக்கோட்டையை சுற்றி வருவார் ; கருப்பண்ண சாமி, மாணிக்க விநாயகர் சன்னதி, சங்கடம

திருச்சிராப்பள்ளி - சரித்திரம் சொல்லும் பூகோளம் !

Image
  நான் பிறந்து , தவழ்ந்து , வளர்ந்து , இருந்த மண் ! அதன் வாசம் , நேசம் , தாக்கம் , இல்லாமல் நான் இல்லை ! அதனைப் பற்றிய நினைவுகளில் லயிக்கும் போதெல்லாம்   ஏதோ ஒரு இனம் புரியாததோர் சிலிர்ப்பு ! ஒரு மண்ணின் பெருமையினை   அதன் பாரம்பரியமும் , கலாச்சாரமும் தான் பறைசாற்ற வேண்டும் என்பதில்லை ! அனுபவித்த விஷயங்களை , பழகிய மனிதர்களை , புழங்கிய இடங்களை   ஒற்றைச் சொற்கள் மூலமும் கூட விளக்கிட இயலும் ! அவ்வகையில் ,  நான் இருந்த காலகட்டத்தில் , 1985 - 1994 வருடங்களில் , நானும் என்னைச் சார்ந்தோரும் பிரயோகித்த ஒற்றை வார்த்தைகளின்   தொகுப்பை இங்கே வழங்குகிறேன் ! படித்துப் பாருங்கள் ! ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு குட்டி சரித்திரம் !   அது எங்களுக்கு மட்டுமே புரியும் ஒரு பூகோளம் ! ( பொறுப்புத்துறவல்  :   பதிவின் நோக்கம் எவரையும் புண்படுத்துவது அல்ல )     ·       மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்   ·       சங்கர விலாஸ்   ·       கிணத்தடி   ·       மலையாளத்தான் கடை   ·       ராஜா கறிக் கடை   ·       வீராசாமி

ஸ்ருதி !

Image
பூவை பறித்தால் தான் என்றில்லை, பறிக்காமல் போனாலும் வாடித் தான் போகும்! பூச்சூடும் பாவை உன் முகம் மட்டும் உயிர் பறிக்கப்பட்டும் வாடாமல் இருப்பதென்ன? எதை மறைத்தாய் எதை புதைத்தாய் ஆள் மனதில் புரியவில்லை! உனைப் புதைக்க இன்று கூடியுள்ளோம் காரணம் தெரியவில்லை! பருவப் பெண் நீ சாகும் பருவமா இது! உருவக் குறைச் சொல்ல உன்னிடத்தில் இருப்பது தான் ஏது! தெய்வக் குழந்தையடி உன்னை பறி கொடுத்து தெய்வக் குற்றம் ஆனதென்னை? கள்ளம் கபடம் இல்லா உன் சிரிப்பை காலன் கொள்ளை கொண்டு போனதென்ன? யார் செய்த பிழைக்கோ நீ வந்து பிறந்தாய்! ஊர் செய்த பிழைக்கு உன் உயிரையும் துறந்தாய்! நாகரிகக் கோமாளிகள் வாழும் இவ்வுலகில் நாகரிகம் சற்றே மறந்திருந்தாய்! கண்ணில் ஆயிரம் கனாக்களுடன் எங்களைச் சுற்றி சுற்றி வந்தாய்! வண்ணத்துப்பூச்சி போல் சிறகடித்து எங்கோ பறந்து சென்றாய்! மண்ணுக்கு மரம் பாரமா இல்லை நிழல் தான் பாரமா ! யாருக்கு நீ பாரம் என எங்களைத் தவிக்க விட்டாய் பாரம்மா ! காலங்கள் கனியும் உன் கோலங்கள் மாறும் என்று காத்து இருந்தோம்! கோலங்கள் அழியத்தான் வேண்டும் என்று விதி மதித்து சொல்லாமல் சொல்லிச்