மேள சப்தத்தை கேட்க, பார்க்க மற்றும் படிக்க உங்களை அழைக்கிறேன்!
இளைப்பாறல்கள்!
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
-
கொஞ்சம் தேநீர்! நிறைய ஆசுவாசம்! பொங்கிய வியர்வை அடங்கும்! புத்துணர்வு பிறக்கும்! நாளை வரும்! நல் வேளை வரும்! நலமாய் நாலு சேதி வரும்! நம்பிக்கை தானே வாழ்க்கை! இளைப்பாறல்கள்! இனிதே; இனிதே!
சமீபத்தில் புதுச்சேரியில் அரங்கேறிய நிகழ்வு, தலைநகரின் 'நிர்பயா' சம்பவம் விளைவித்த அதிர்வலைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல...! பிஞ்சுகளையும் புசிக்கத் தயங்கா காமுகர்களின் அரக்க குணம் போதை வஸ்துவின் புழக்கத்தால் தூண்டப்பட்ட ஒன்று எனக் காரணம் அறியப்பட்டாலும், பலியான அந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம் எப்படித் தேடுவது? என்ன பாவம் செய்தது அந்தப் பெண் குழந்தை?? அதனைப் பாதுகாக்கத் தவறியது யார் குற்றம்? அதனைப் பெற்றோரா? இல்லை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சுயநல சமூகமா? சட்டம் ஒழுங்கை கண்காணிக்கத் தவறிய காவல் துறையா? இல்லை அந்தக் காவலர்களை தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு செய்திடப் பணித்த அரசியல்வாதிகளா? இல்லை இவற்றினையெல்லாம் அரங்கேற்றி வேடிக்கை பார்க்கும் அந்த மகா சக்தியா? இல்லை அப்படி ஒன்று தான் உளதா? கேவலமான இந்த அவலங்களைப் வெறும் செய்தியாக கேட்டுக் கடந்து போகாமல், பாட்டன் பாரதிதாசன் சொன்னது போல... "பண்ணப் பழகடா பச்சை படுகொலை" எனும் அடிப்படையில், இதன் ஆணிவேர் எதுவோ, யாரோ.... அதனை பாரபட்சம் காட்டாது வேரோடு உடனடியாக களைந்தெற
ஆண்டு 1991..! மேல்நிலைப்பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறையும் கழிந்து புனித வளனார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு.. பதினேழு, பதினெட்டு வயது மட்டுமே நிரம்பிய என்னைப் போன்ற ஏராளமான இளைஞர் பலர் தங்கள் அரும்பு மீசை எட்டிப் பார்க்க முதல்நாள் அடியெடுத்து வைத்த நாள் இன்னும் பசுமையாய் நினைவுகளில்...! ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அமர்ந்து படித்த இயற்பியல் வகுப்பில் மர இருக்கைகளின் அரங்க அமைப்பு வகுப்பை மேலும் பிரமாண்டமாக காட்ட, மாணாக்கர்கள் ஆங்காங்கே ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டிருக்க... திடீரென எனை நோக்கி நெடு நெடு உயரத்தில் ஓர் இளைஞன் திராவிட நிறத்தில் கண்களில் வசீகரம் மின்ன, உதட்டின் மெல்லிதாய் ஒரு சிறு புன்னகையைய்த் தவழவிட்டுக் கொண்டு அருகில் வரவும், ஏதோ ஓர் சொல்லனா பரிச்சயம் இருவரிடத்தும் உணரப்பட்ட நிலையில், "ஃபிராங்க்ளின், பிரிட்டோ காலனி, மணிகண்டன், மலைகோட்டை" என கை குலுக்கிக் கொண்டு நலம் பரிமாற்றிக் கொண்டோம்..! இருவரும் பள்ளிப் பிராயத்தில் பாராது "பார்த்துக்" கொண்டிருந்ததை அளவலாவிக் கொண்டோம்..! 10ஆம் வகுப்பில் மதிய இடைவேளைகளில
1991 ஆம் ஆண்டு ...! பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வில் நான் வாங்கிய மதிப்பெண்கள் மதிப்புடையதாயிருப்பினும் அண்ணன் பாரதி படித்த ஆர் இ சியில் சேருமளவுக்கு அதற்குத் தகுதியில்லை என அப்பா எனக்கு மாற்று வாய்ப்பை அமைத்துத் தராது போயினும் , கிடைத்ததே போதும் எனக் கருதி என்னை திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை இயற்பியலில் சேர்த்துக் கொண்டு , மூன்று வருடங்கள் தவமாய் படித்து தனிச்சிறப்புடன் முதல் வகுப்பில் தேர்வான எனக்கு , அந்த மதிப்பெண்கள் மட்டும் என் சொந்தக் கல்லூரியிலேயே எம் சி ஏ படிப்பதற்கு உதவாது , அதற்கு பணமோ அல்லது சிபாரிசோ தேவை என்றும் அது என் அப்பாவால் கொண்டுவர முடியாது என்றும் தெரியாது ...! 1994 ஆம் ஆண்டு ...! கூடப் படித்தவர்கள் எல்லாரும் சாமர்த்தியமாய் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டு பயணிக்கத் துவங்கிய பொழுது திக்குத் தெரியாமல் எந்தப் பக்கம் போவது என்று நிலைதடுமாறி என் செய்வது என்று அறியாமல் பொறியியல் படிப்பினும் கடினமானதும் , கல்லூரிகளில் படிப்பிக்க இயலாததுமான ஏ எம் ஐ
Comments
Post a Comment