தங்கத் தாரகை திகட்டாத பூமழை விண்மீன் வானிலே ஒளிரும் புன்னகை அன்பின் சிகரம் நீ அழகின் உச்சம் நீ காந்தக் கண்ணினால் கவரும் கவிதை நீ உன்னைப் பார்த்த அந்த முதல் பொழுது மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் நீ பேசும் ஓர் மௌன மொழி ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை இந்த பூமி எங்கும் பூக்களடி நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...
உன்னோட நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கிரெட்டாவே...! பத்து வருடங்களுக்கு முன் உன் கொரிய அண்ணன் "வெர்ணா" நான்கு வருட பந்த பாசத்திலிருந்து எங்களை விட்டு பிரிந்து சென்ற சோகத்தினை சில நாட்களிலேயே அழகிய உன் "செவ்வண்ணச்" சிரிப்பால் மறந்திடச் செய்தாய்...! *என்னால்" இயக்குவதிலிருந்து "தன்னால்" இயங்குபவனாய் ஆன எந்திரனைப் பெற்ற உன்னை இயக்குவது எவ்வளவு சுலபம் என வந்த சில நாட்களில் சொல்லாமல் சொல்லி எங்களை சொக்க வைத்தாய்...! தென்குமரி, வட திருப்பதி தொடங்கி நெல்லூர், அதிரம்பள்ளி, பெங்களுர் ஆகிய அண்டை மாநிலங்கள் வரை அம்பை, பம்பை என பம்பரமாய்ச் சுழன்று நீ எங்களை கூ(ஓ)ட்டிச் செல்லாத இடம் தான் உண்டோ...? ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிலோமீட்டர்கள் என்கிறது உன் ஓடோமீட்டர்...! வருடங்கள் பத்து ஆயிற்று நீ வந்து என காலம் உணர்த்துகிறது...! ஆனாலும் மனம் அதை ஏனோ ஒத்துக் கொள்ள மறுக்கிறது...! எரிபொருளில் 20 சதவிகிதம் எத்தனாலை அரசாங்கம் படிப்படியாக கலந்திடத் துணிந்ததால் உன் இதயத்திற்கு அபாயம் என உணரத் துவங்குவதற்கு சாட்சியாக உன் செயல்பாட்டில் சற்றே ...
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது ! அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அரிது ! எதிலிருந்து துவங்குவது என்றுத் தெரியவில்லை ! முக்கியமான எதையும் விட்டுவிடக் கூடும் பாவம் செய்யும் துணிச்சலும் எனக்கு இல்லை ! பதிவுகள் பலவும் பலகாலம் நான் எழுதி வந்தாலும் இப்பதிவு எழுதும் அவசியம் இப்பொழுது வந்தாகி விட்டதா எனவும் விளங்கவில்லை ! இருப்பினும் இனியும் எழுதாது தாமத்திதால் என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் என்று எனக்குத் தோணவில்லை ! ஆதலால் துளியும் தள்ளிபோடாது எழுதக் கடவுவது என எனக்கே ஒரு கட்டுப்பாடை வரைந்துக் கொண்டுத் துவங்குகிறேன் ! வருடம் 1970! அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியொன்பது ! அந்த யுவதிக்கோ இருபத்தியொன்று இருந்திருக்கலாம் ! சொந்தமே ஆனாலும் காதல் செய்வது எனக் கருதி முறைப் பெண்ணிற்கு " கள்ளோ காவியமோ " பரிசளிக்கின்றான் ! காதலியின் கன்னத்தில் வெட்கச் சிவப்பு மறையும் முன் ...
Comments
Post a Comment