தேநீர்க் கவிதை..!


பெண்ணே,
உன் சேலைக்கும்,
திரைச்சீலைக்கும்,
விடியற்காலைக்கும்
தான் தெரியும்
நம் அந்தரங்கம்...!

ஆடை அணி,
பொய்த்தூக்கம் களை!
உன் நக இடுக்குகளில்
என் சதைத் திரள்கள்!
என் மேனியெங்கும்
உன்னுயிர்த் தீண்டல்கள்!

எழு, நம் காதல் காயங்கள் ஆற்றுவோம்!
காம அயர்ச்சி தீர
தேநீர் சற்று பருகுவோம்...!

-மணிகண்டன். பா




Comments

Popular posts from this blog

என்ன தவம் செய்தேன் நான்!

தங்கத் தாரகை

கடவுள் இருக்கிறார்!