தங்கத் தாரகை திகட்டாத பூமழை விண்மீன் வானிலே ஒளிரும் புன்னகை அன்பின் சிகரம் நீ அழகின் உச்சம் நீ காந்தக் கண்ணினால் கவரும் கவிதை நீ உன்னைப் பார்த்த அந்த முதல் பொழுது மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் நீ பேசும் ஓர் மௌன மொழி ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை இந்த பூமி எங்கும் பூக்களடி நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...
எல்லாமும் மாறிப் போகும் ஒரு நொடிப் பொழுதினில்...! வாழ்க்கை எவ்வளவு அழகானாதோ அதைவிடப் பன்மடங்கு கோரமானதும் கூட..! தங்களது ஆதர்ச நாயகனையும் அவர்கள் வென்று வந்த வெற்றிக் கோப்பையினையும் ஒரு முறையாவது தரிசித்துவிட கண்களில் ஏக்கத்துடனும் நெஞ்சினில் ஆர்வத்துடனும் பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் பரிதவித்த அந்த 11 உயிர்களுக்குத் தெரியாது தாம் இன்னும் ஒரு சில மணித் துளிகளில் ஜன நெருக்கடியில் சிக்கி சிதைந்து சின்னாபின்னமாகி மாயப் போகின்றோம் என்று...! தேனிலவுக்கு வந்த இடத்தில் சிரபுஞ்சி சாரலில் அருவியின் அழகை பார்த்து பரவசமடைந்து கொண்டிருந்த அப்பாவி மாப்பிள்ளைக்குத் தெரியாது நாம் இன்னும் சிறிது நேரத்தில் அக்னி சாட்சியாய் தொட்டு தாலியிட்ட மனைவியின் சதியால் படுகொலை செய்யப்படுவோம் என்று..! லண்டனில் மென்பொருள் பொறியராக ஆறேழு வருடங்கள் பணி செய்து வந்து கொண்டிருந்த தன்னுடன் இந்தியாவில் மருத்துவராய் இருக்கும் தன் மனைவியையும் பணியை ராஜினாமா செய்துவிடச் செய்துவிட்டு அழகிய மூன்று குழந்தைகளுடன் நிரந்தரமாக அங்கேயே குடியேற முடிவு செய்து கனவுகளுடன் ஆனந்தமாய் விமான உட்புறத்தில் செல்ஃ...
நான் தினமும் காலையில் விழிக்கும் பொழுது... அருகில் நீ இன்னும் நித்திரை கலையாதிருக்கின்றாய்... கலைந்து கிடக்கும் உன் கேசம்... அதில் முழுவதுமாய் வியாபித்திருக்கும் பெண்ணே உன் வாசம்...! உன்னை எழுப்ப மனமில்லாமல் உன் முகம் பார்த்து காத்திருப்பேன்.. நான் முழித்தது உணர்ந்து மெல்லிதாய் விழித்தும் விழிக்காமல் கண்களைத் திறந்து மூடிக்கொள்வாய்.. "இன்னும் கொஞ்சம் நேரம்ப்பா" உன் குரல் கொஞ்சலாய் கெஞ்சும்... நெற்றிப் பொட்டு இடம் மாறி இமைதனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.. சிரித்துக் கொள்வேன்... வறண்டிருக்கும் உன் இதழ்களுக்கு முத்தங்களால் ஈரம் நனைத்திட்டு என்னை மெதுவாய் உன்னிடத்திலிருந்து விடுவித்திக் கொள்ள முயற்சிப்பேன்... மீண்டும் என்னை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு செல்லமாய் வன்முறை செய்கின்றாய்..! என்னை தினசரி கொல்லாமல் கொல்கின்றாய்..! "தோழியே ....காதலியே...! போதும் எழுந்திடு..!" எனக் கரையும் உன் காதலனின் திருப்பள்ளியெழுச்சி உன் செவிதனில் விழவில்லையா?? நம் காதலின் செய்திகள் தரவில்லையா?? பா. மணிகண்டன்
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
ReplyDelete