மேள சப்தத்தை கேட்க, பார்க்க மற்றும் படிக்க உங்களை அழைக்கிறேன்!
இளைப்பாறல்கள்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கொஞ்சம் தேநீர்! நிறைய ஆசுவாசம்! பொங்கிய வியர்வை அடங்கும்! புத்துணர்வு பிறக்கும்! நாளை வரும்! நல் வேளை வரும்! நலமாய் நாலு சேதி வரும்! நம்பிக்கை தானே வாழ்க்கை! இளைப்பாறல்கள்! இனிதே; இனிதே!
தங்கத் தாரகை திகட்டாத பூமழை விண்மீன் வானிலே ஒளிரும் புன்னகை அன்பின் சிகரம் நீ அழகின் உச்சம் நீ காந்தக் கண்ணினால் கவரும் கவிதை நீ உன்னைப் பார்த்த அந்த முதல் பொழுது மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் நீ பேசும் ஓர் மௌன மொழி ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை இந்த பூமி எங்கும் பூக்களடி நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...
எல்லாமும் மாறிப் போகும் ஒரு நொடிப் பொழுதினில்...! வாழ்க்கை எவ்வளவு அழகானாதோ அதைவிடப் பன்மடங்கு கோரமானதும் கூட..! தங்களது ஆதர்ச நாயகனையும் அவர்கள் வென்று வந்த வெற்றிக் கோப்பையினையும் ஒரு முறையாவது தரிசித்துவிட கண்களில் ஏக்கத்துடனும் நெஞ்சினில் ஆர்வத்துடனும் பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் பரிதவித்த அந்த 11 உயிர்களுக்குத் தெரியாது தாம் இன்னும் ஒரு சில மணித் துளிகளில் ஜன நெருக்கடியில் சிக்கி சிதைந்து சின்னாபின்னமாகி மாயப் போகின்றோம் என்று...! தேனிலவுக்கு வந்த இடத்தில் சிரபுஞ்சி சாரலில் அருவியின் அழகை பார்த்து பரவசமடைந்து கொண்டிருந்த அப்பாவி மாப்பிள்ளைக்குத் தெரியாது நாம் இன்னும் சிறிது நேரத்தில் அக்னி சாட்சியாய் தொட்டு தாலியிட்ட மனைவியின் சதியால் படுகொலை செய்யப்படுவோம் என்று..! லண்டனில் மென்பொருள் பொறியராக ஆறேழு வருடங்கள் பணி செய்து வந்து கொண்டிருந்த தன்னுடன் இந்தியாவில் மருத்துவராய் இருக்கும் தன் மனைவியையும் பணியை ராஜினாமா செய்துவிடச் செய்துவிட்டு அழகிய மூன்று குழந்தைகளுடன் நிரந்தரமாக அங்கேயே குடியேற முடிவு செய்து கனவுகளுடன் ஆனந்தமாய் விமான உட்புறத்தில் செல்ஃ...
அக்னி குஞ்சொன்று கண்டேன்! இன்று அதிகாலை என் வீட்டின் முகவறையில் தங்க ஜ்வாலையாக அக்னி குஞ்சொன்று பிரவேசிக்கக் கண்டேன்! கண்டதும் பேரானந்தம் கொண்டேன்! கைகளினில் அள்ளி மேனி முழுமையும் பூசிக்கொண்டேன்! முப்பாட்டன் பாரதியே என்னைத் தழுவியதாய் எண்ணி, உடல் சிலிர்த்து போனேன்! சமூக கோபங்கள் ரணங்களாய் எரித்தாலும், அவன் தழுவியதில் அவையாவும் சாம்பலாய் பறக்கக் கண்டேன்! ஆம், பாரதி ஒரு அமரன்! அவன் கண்டெடுத்த அக்னி குஞ்சொன்றை பார்க்கப் பெற்றதனால், நானும் அவனுடன் சேர்ந்து அமரனாகிப் போனேன்!
Comments
Post a Comment