மேள சப்தத்தை கேட்க, பார்க்க மற்றும் படிக்க உங்களை அழைக்கிறேன்!
இளைப்பாறல்கள்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கொஞ்சம் தேநீர்! நிறைய ஆசுவாசம்! பொங்கிய வியர்வை அடங்கும்! புத்துணர்வு பிறக்கும்! நாளை வரும்! நல் வேளை வரும்! நலமாய் நாலு சேதி வரும்! நம்பிக்கை தானே வாழ்க்கை! இளைப்பாறல்கள்! இனிதே; இனிதே!
தங்கத் தாரகை திகட்டாத பூமழை விண்மீன் வானிலே ஒளிரும் புன்னகை அன்பின் சிகரம் நீ அழகின் உச்சம் நீ காந்தக் கண்ணினால் கவரும் கவிதை நீ உன்னைப் பார்த்த அந்த முதல் பொழுது மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் நீ பேசும் ஓர் மௌன மொழி ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை இந்த பூமி எங்கும் பூக்களடி நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...
உன்னோட நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கிரெட்டாவே...! பத்து வருடங்களுக்கு முன் உன் கொரிய அண்ணன் "வெர்ணா" நான்கு வருட பந்த பாசத்திலிருந்து எங்களை விட்டு பிரிந்து சென்ற சோகத்தினை சில நாட்களிலேயே அழகிய உன் "செவ்வண்ணச்" சிரிப்பால் மறந்திடச் செய்தாய்...! *என்னால்" இயக்குவதிலிருந்து "தன்னால்" இயங்குபவனாய் ஆன எந்திரனைப் பெற்ற உன்னை இயக்குவது எவ்வளவு சுலபம் என வந்த சில நாட்களில் சொல்லாமல் சொல்லி எங்களை சொக்க வைத்தாய்...! தென்குமரி, வட திருப்பதி தொடங்கி நெல்லூர், அதிரம்பள்ளி, பெங்களுர் ஆகிய அண்டை மாநிலங்கள் வரை அம்பை, பம்பை என பம்பரமாய்ச் சுழன்று நீ எங்களை கூ(ஓ)ட்டிச் செல்லாத இடம் தான் உண்டோ...? ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிலோமீட்டர்கள் என்கிறது உன் ஓடோமீட்டர்...! வருடங்கள் பத்து ஆயிற்று நீ வந்து என காலம் உணர்த்துகிறது...! ஆனாலும் மனம் அதை ஏனோ ஒத்துக் கொள்ள மறுக்கிறது...! எரிபொருளில் 20 சதவிகிதம் எத்தனாலை அரசாங்கம் படிப்படியாக கலந்திடத் துணிந்ததால் உன் இதயத்திற்கு அபாயம் என உணரத் துவங்குவதற்கு சாட்சியாக உன் செயல்பாட்டில் சற்றே ...
நான் தினமும் காலையில் விழிக்கும் பொழுது... அருகில் நீ இன்னும் நித்திரை கலையாதிருக்கின்றாய்... கலைந்து கிடக்கும் உன் கேசம்... அதில் முழுவதுமாய் வியாபித்திருக்கும் பெண்ணே உன் வாசம்...! உன்னை எழுப்ப மனமில்லாமல் உன் முகம் பார்த்து காத்திருப்பேன்.. நான் முழித்தது உணர்ந்து மெல்லிதாய் விழித்தும் விழிக்காமல் கண்களைத் திறந்து மூடிக்கொள்வாய்.. "இன்னும் கொஞ்சம் நேரம்ப்பா" உன் குரல் கொஞ்சலாய் கெஞ்சும்... நெற்றிப் பொட்டு இடம் மாறி இமைதனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.. சிரித்துக் கொள்வேன்... வறண்டிருக்கும் உன் இதழ்களுக்கு முத்தங்களால் ஈரம் நனைத்திட்டு என்னை மெதுவாய் உன்னிடத்திலிருந்து விடுவித்திக் கொள்ள முயற்சிப்பேன்... மீண்டும் என்னை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு செல்லமாய் வன்முறை செய்கின்றாய்..! என்னை தினசரி கொல்லாமல் கொல்கின்றாய்..! "தோழியே ....காதலியே...! போதும் எழுந்திடு..!" எனக் கரையும் உன் காதலனின் திருப்பள்ளியெழுச்சி உன் செவிதனில் விழவில்லையா?? நம் காதலின் செய்திகள் தரவில்லையா?? பா. மணிகண்டன்
Comments
Post a Comment